"கூட்டங்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து" - தமிழக அரசு

0 3611
"கூட்டங்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வழங்கப்பட்ட அனுமதி ரத்து" - தமிழக அரசு

அரசியல் மற்றும் சமுதாயம் சார்ந்த கூட்டங்கள் போன்றவற்றில், 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், வெளிநாடுகளில் கொரோனா நோய்த் தொற்று இரண்டாம் அலையாகப் பரவுவதால் தமிழகத்தில் நோய்த் தடுப்புப் பணிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. அதனால் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள், கல்வி சார்ந்த விழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களில், நூறு பேருக்கு மிகாமல் பங்கேற்கும் வகையில் அனுமதிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments